the tenincarnations of the God Thirumal...(Maha Vishnu) viz., 1.Matsyam, 2.Kūrmam, 3.Varākam, 4.Naraciṅkam, 5.Vāmaṉaṉ, 6.Paracurāmaṉ, 7.Rāmaṉ, 8.Palarāmaṉ, 9.Kiruṣṉaṉ, 10,Kaṟki...
திருமாலின் பிரதானமான பத்து அவதாரங்கள் எவை என்பதில் பலவேறு கருத்துகள் நிலவுகின்றன..சில நூல்கள் கிருட்டிணனை எட்டாவதாகவும், புத்தனை ஒன்பதாகவும் கொள்கின்றன...ஆனால் 17-ம் நூற்றாண்டின் 'யதீந்திரமததீபிகா' என்னும் வைணவக் கொள்கையை விவரிக்கும் நூலின்படி, பலராமன் எட்டாவதாகவும், கிருட்டிணன் ஒன்பதாவதாகவும் கொள்ளப்படுகின்றனர்.
சில தீவிர வைணவர்கள் புத்தனை திருமாலின் அவதாரமாகவே ஒப்புக்கொள்வதில்லை...அவர்களுக்கு பலராமன் மட்டுமே திருமாலின் எட்டாவது மற்றும் கிருட்டிணன் ஒன்பதாவது அவதாரங்களாகும்...புத்தன் துவைத, சுமார்த்த, அத்துவைதக் கோட்பாட்டாளருக்கும் திருமாலின் அவதாரமல்ல...
மராத்தி, கோவா சம்பிரதாயத்தில் இறைவன் பாண்டுரங்க விட்டலனையும், ஒரிசாவில் இறைவன் சகன்னாதனும் புத்தனுக்கு மாற்றான திருமாலின் அவதாரமாக சில சிற்ப, சோதிட மற்றும் இலக்கிய பாரம்பரியத்தில் கருதப்படுகிறார்கள்...
கீத கோவிந்தம் இயற்றிய ஜயதேவர், பலராமன், புத்தன் இருவரையுமே அவதாரங்களாக்கி, கிருட்டிணனை ஓர் அவதாரமாகவேக் கருதாமல், நேரடியாக திருமாலாகவே அதாவது முழுமுதற் கடவுளாகவே உருவகப்படுத்திப் பாடியுள்ளார்...