அந்தர்யாமித்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அந்தர்யாமித்துவம்:
என்றால் இறைவன் திருமாலின் நான்காவது நிலை----படம்--இந்தியாவின் காசுமீரத்து திருமால் சிலை

பொருள்[தொகு]

  • அந்தர்யாமித்துவம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अन्तर् + यामित्वम् = अन्तर्यामित्वम् --அந்த1ர் + யாமித்1வம் = அந்த1ர்யாமித்1வம்--மூலச்சொல்)
  1. திருமால் நிலையுளொன்று (அஷ்டாதச. தத்வத். 3, 42.)

விளக்கம்[தொகு]

  • இறைவன் திருமாலின் ஐந்து நிலைகளுள் நான்காவது நிலை அந்தர்யாமித்துவம்...வடமொழியில் अन्तर्यामिन्--அந்த1ர்யாமின் எனில் ஆன்மா என்றுப் பொருள்..இறைவன் திருமால் உலகின் (பிரபஞ்சம்) எல்லா உயிரினங்கள்/பொருட்கள் அனைத்தின் உள்ளேயும், அவற்றின் ஆன்மாவாக இருந்து, அவற்றை ஆண்டுக்கொண்டும் , இயக்கியும் சரியானப் பாதையில் வழி நடாத்துபவராக இருக்கிறார்...அதாவது எல்லா உயிரினங்களின் ஆன்மா அவர்தான்!...இந்த நிலைக்கு அந்தர்யாமித்துவம் என்றுப் பெயர்...
  • இதையும் காண்க...திருமால்நிலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. manifestation of Viṣṇu as being immanent in the universe and governing it, one of five tirumāl-nilai.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தர்யாமித்துவம்&oldid=1898428" இலிருந்து மீள்விக்கப்பட்டது