பரமபதித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பரமபதித்தல்:
என்றால் இறந்துபோதல்...படம் வைணவக் குலச்சின்னம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பரமபதித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • வைணவர்களின் மொழி
  • (பரமபதி+த்தல்)
  1. இறத்தல்
  2. மரணம் அடைதல்

விளக்கம்[தொகு]

  • பரமபதம் என்றால் வைணவர்களின் முழுமுதற் கடவுளான திருமாலின் உறைவிடம்/அவருடைய மோட்ச சித்தியளிக்கும் அருள்...வைணவர்களில் மதகுருக்கள், ஆசாரியர்கள், மிகுந்த வயதானவர்கள், வேத, சாத்திரங்களில் புலமை மிக்கவர்கள் ஆகியோர் மரணம் அடைந்துவிட்டால், காலமாகிவிட்டார், இறந்துவிட்டார், செத்துப்போய் விட்டார் என்று சொல்லமாட்டார்கள்...மாறாக 'பரமபதித்துவிட்டார்' என்றே சொல்வர்...இறந்தவர்கள் திருமால் வாழும் பரமபதத்திற்கு சென்று, மறுப்பிறப்பு இல்லாமல், அவரில் ஐக்கியமாகி, முக்தி அடைந்துவிட்டார் என்பது பாவம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To pass away to heaven, die



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரமபதித்தல்&oldid=1282185" இலிருந்து மீள்விக்கப்பட்டது