எத்துவாழி
தோற்றம்
ஏய்த்துவாழி (எத்துவாழி)
சொல் பொருள் விளக்கம்
பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப்பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர். ஏய்த்து வாழி என்பதன் பிழைவடிவு அது. வாழி = வாழ்பவன்(ள்). தட்டிக் கழித்தல், சாக்குப் போக்குச் சொல்லுதல் என்பவை எத்துவாழியர் கைம்முதல் சரக்காகும். இது தென்னக வழக்கு.