கண்ணீரும் கம்பலையும்
தோற்றம்
கண்ணீரும் கம்பலையும்
சொல் பொருள்
கண்ணீர் – அழுகை. கம்பலை – அரற்றுதல்.
விளக்கம்
அழுது அரற்றுதல் என்பது ‘கண்ணீரும் கம்பலையுமாக’ எனச் சொல்லப்படும். கண்ணீர் என்பது வெளிப்படை. ‘கம்பலை’ அரவம், ஒலி, அரற்று என்னும் பொருள் தருவது. ஆரவாரமிக்க சிறுவரும் சிறுமியரும் “கம்பலை மாக்கள்” எனப்படுவர். (சிலம்பு. ஊர் சூழ்.29)