கரம்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

|கரம்பை

பெரிய எழுத்துக்கள்[தொகு]

ஏரி, குளங்களில் அடியில் படியும் வண்டல் மண் “கரம்பை” என்று அழைக்கப்படுகிறது.தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இவ்வழக்கு உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரின் பெயர் கரம்பை. கரம்பை என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டு பல கிராமங்கள் உள்ளன.(எ.கா.) குருவிக்கரம்பை, பேய்க்கரம்பை, கரம்பைக்குடி.

கரம்பை மண்[தொகு]

காட்டில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்க்கும் போது அவை மண்ணில் மக்கும். மழைபெய்யும் போது இலைமக்குகள் மண்துகள்களோடு ஆற்றில் அடித்து வரப்படும். ஆற்றுநீர் ஏரி குளங்களில் தேக்கப்படும். நீரில் உள்ள மண்துகள்கள் நாளடைவில் நீர்நிலையின் அடியில் தரையில் படியும்.

பயன்[தொகு]

கோடைகாலத்தில் நீர்நிலைகள் வற்றியபின் அடியில் படிந்த கரம்பை மண்ணை அள்ளி விவசாய நிலங்களுக்கு இடுவர். இதனால் விளைநிலம் வளம் பெறும். மேலும் நீர்நிலைகளும் தூறு வாரப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரம்பை&oldid=1380802" இலிருந்து மீள்விக்கப்பட்டது