குற்றுயிரும் குலையுயிரும்
தோற்றம்
குற்றுயிரும் குலையுயிரும்
சொல் பொருள்
குற்றுயிர் – மூச்சு உள்ளே போகிறதோ வெளியே வருகிறதோ என்பது தெரியாமல் அரைகுறை உயிராகக் கிடக்கும் நிலை. குலையுயிர்- நெஞ்சாங்குலையில் மட்டும் உயிர்த்துடிப்பு இருக்கும் நிலை. குறுமை – சிறுமை; வெளிப்பட அறியமுடியாமல் மெல்லெனச் செல்லும் மூச்சு நிலையை இவண் குறித்தது.
விளக்கம்
குலை என்பது நெஞ்சாங்குலையாம் நுரையீரலைக் குறித்தது. அங்கே ஒடுங்கிய பின்னரே உயிர் பிரிந்தது என்று கொள்ளப்படுகின்றதாம். குலையை ‘ஈரற்குலை’ என்பதும் வழக்கு. “குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்” என்பது நடைமுறைச் செய்தி.