கூராப்பு
தோற்றம்
கூராப்பு
சொல் பொருள் விளக்கம்
மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு. ‘கூர் ஆர்ப்பு’ கூராப்பு ஆயது. கூர்தல் என்பது மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல். ஆர்த்தல், கட்டுதல். எ-டு: மாரார்ப்பு (மாராப்பு) செறிந்து நிற்கும் மழைமுகிலைக் கூராப்பு என்பது இலக்கிய நயமுடையது. கூரை வேய்தலையும் எண்ணலாம்.