தானம் தவம்
தோற்றம்
தானம் தவம்
சொல் பொருள்
தானம் – கொடை தவம் – சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம்.
விளக்கம்
தானம் – கொடை, பொருட்கொடை மட்டுமன்று தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன்- தான்- தானம் – என அதன் தோற்றமே,
‘வாள் தந்தனனே தலை எனக்கீய’
என்னும் தலைக் கொடையாளி குமணனை நினைவூட்டும்.
தவம் என்பது ‘தவ்’ என்னும் வேர் வழியது தவ்-சுருக்கம்
உண்டி, உடை, உறைவு எல்லாம் எளிமையதாய் தேவையைச் சுருக்குவதாய், சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம்.
தானம் தவம் இரண்டும் தங்கா, வானம் வழங்காதெனின் என்பது வள்ளுவம். (குறள் 29)