நிட்காமியம்
பொருள்
நிட்காமியம்(பெ)
- பயனை விரும்பாது செய்யுஞ் செயல்; நிஷ்காமியகருமம்
- நிட்காமிய தவஞானத்தினுக்சென்றறியே (வேதா. சூ. 179).
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- deed done without expectation of any reward
விளக்கம்
பயன்பாடு
- கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்:
- சாக்கடையில் விழுந்தாலும்
- சந்தனத்தில் விழுந்தாலும்
- எதுவுமே -
- ஒட்டிக் கொள்ளாமல்
- உள்ளது உள்ளபடியே
- எழுந்து வருகிறது -
- என்னுடைய நிழல்.
- நிழலுக்கு இருக்கும் - இந்த
- நிட்காமிய ஞானம் - என்
- உடலுக்கும் வாய்க்குமாயின்-
- ஆதிசங்கரரைப் போல்
- அடியேனுக்கும் -
- கள்ளும் ஒன்று;
- காய்ச்சிய ஈயமும் ஒன்று!
- நான் விசனிப்பதெல்லாம் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?(கலாரசிகனின் இந்த வாரம்: வாலி மீது எய்த பாணம், தமிழ்மணி, 29 ஜூலை 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- நிட்காமியம் x காமியம்
ஆதாரங்கள் ---நிட்காமியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காமம், காமி, காமியம், ஆகாமியம், காமியக்கல், காமியமரணம், நிட்காமியகருமம், நிஷ்காமியகருமம்