பட்டை தீட்டல்
தோற்றம்
பட்டை தீட்டல்
சொல் பொருள் விளக்கம்
“அவனை நம்பினை; அவன் நன்றாகப் பட்டை தீட்டி விட்டான்” என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம். “பட்டை நாமம் பரக்கச் சார்த்தல்; கொட்டை நாமம் குழைச்சிச் சார்த்தல்” என்னும் பழமொழியும் ஏமாற்றை விளக்குவதாம். வயிரத்திற்குப் பட்டை தீட்டல் ஒளியூட்டுவதாம். சிலர் நல்ல ஆசிரியரை அல்லது பெருமக்களை அடுத்து அறிவன அறிந்து கொண்டால் அவரைப் பட்டை தீட்டப்பட்ட ஆள் எனப்பாராட்டல் உண்டு. இப்பட்டை ஒளியுடைமையாம் அறிவுடைமையைச் சுட்டுவதாம்.