பயனர்:காலதெய்வங்கள்
காலதெய்வங்கள் என்பது நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் பால்வெளி அண்டத்தில் அமைந்துள்ள கோள்கள், துணைகோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு தனித்துவமான குணங்கள், இயல்புகள், பலபண்புகளை சிவபெருமானின் தெய்வீக அருளால் சக்தியால் அருளப்பட்டு, அருள் செய்து காலதெய்வங்களாக்கப்பட்டு அவைகள் சூரிய மையக் கோட்பாடு மற்றும் புவி மையக் கோட்பாடு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்த காலச்சக்கர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர் சோதிட காலக்கணிதத்தின் காலதெய்வங்களாக அருள்பாலித்து வருகின்றன இதனால் அன்றிலிருந்து அண்டத்தின் தாக்கத்தை பிண்டத்தின் மீது உள்ளதாகும் இது குறிப்பாக ஒருவரின் பிறப்பு, வளர்ச்சி, ஏற்றம், இறக்கம் சுகதுக்கம் மற்றும் மறைவு போன்றவற்றை அண்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்துகிறது
பதினொன்று காலதெய்வங்கள்: கேது, சுக்ரன், பூமி, நிலா, செவ்வாய், ராகு, வியாழன், சனி, புதன், மாந்தி, சூரியன் ஆகும்.
இருபத்தேழு காலமனை: அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி, மற்றும் இரேவதி ஆகும். இவை வானத்தில் சூரியமைய, புவிமைய ஆகிய பாதையில் அமைந்துள்ளன. இந்த காலமனை தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன, மேலும் இவை தமிழர் சோதிட காலக்கணிதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த இருபத்தேழு காலமனைகளை இருபத்தேழு நட்சத்திரங்களாக பிற சோதிடத்தில் கூறப்படுகிறது.
பன்னிரண்டு வீடுகள்: காலன், பறவை, கழுகு, மான், தீபம், குதிரை, காலதேவி, தேள், யானை, காகம், பசு, மீன் ஆகும். இவை வானத்தில் சூரியமைய, புவிமைய ஆகிய பாதையில் அமைந்துள்ளன. இந்த வீடுகள் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை தமிழர் சோதிட காலக்கணிதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பன்னிரண்டு வீடுகளை பன்னிரண்டு ராசிகளாக பிற சோதிடத்தில் கூறப்படுகிறது.
108 ஒளியிடம் இவை வானத்தில் சூரியமைய, புவிமைய பாதையில் அமைந்துள்ளன. இந்த ஒளியிடம் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை தமிழர் சோதிட காலக்கணிதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த 108 ஒளியிடத்தை 108 பாதங்களாக பிற சோதிடத்தில் கூறப்படுகிறது.