உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Alexander Savari/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிரேர்னா தியோஸ்தலி

[தொகு]

லெப்டினன்ட் கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி (Lieutenant Commander Prerna Deosthalee) இந்திய கடற்படையில் தற்போது பணியாற்றும் ஒரு கடற்படை பெண் அதிகாரி ஆவார்.இவர் இந்திய கடற்படையின் போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண் அதிகாரி ஆவார். இந்திய கடற்படையில் உள்ள துபோலேவ் டியு-142 கடல்சார் உளவு விமானத்தில் பணிபுரிந்த, கடற்படையின் முதல் பெண் நோக்குநர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

தியோஸ்தலி இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் மும்பையில் பிறந்தார்.இவர் மும்பையில் உள்ள இயேசு மற்றும் மேரி கான்வென்ட்டில் பயின்றார். பின்னர் மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பயின்று உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது சகோதரரும் இந்திய கடற்படையில் அதிகாரியாக உள்ளார்.[1]

கடற்படை வாழ்க்கை

[தொகு]

தியோஸ்தலி 2009 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார். கடற்படை விமான நோக்குநராக இருந்த அவர், கடல்சார் உளவு விமானமான P-8I இல் பணியாற்றினார். பின்னர் அவர் துபோலேவ் டியு-142 [1]இல் முதல் பெண் நோக்குநராக ஆனார். அவர் கொல்கத்தா-வகுப்பு நாசகார கப்பலான ஐஎன்எஸ் சென்னை (D65)) [2] ல் முதல் லெப்டினன்ட் ஆக பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டு டிசம்பரில், இந்திய கடற்படை போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியாக (CO) நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார். அவர் நீர்த்தாரை விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல் INS டிரின்கட் (T61) [3] கப்பலின் கட்டளை அதிகாரியாக (CO) ஆக நியமிக்கப்பட்டார்.இது பெண் பணியாளர்களுக்கான 'அனைத்து பணிகளும்- அனைத்து தரநிலையினரும் என்ற இந்திய கடற்படையின் தத்துவத்தைப் பின்பற்றியது [4][5] கட்டளையிடும் கொடி அதிகாரி தரத்தில் உள்ள மேற்கு கடற்படையின் ரியர் அட்மிரல் சி. ஆர். பிரவீன் நாயர் அவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கினார் [6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தியோஸ்தலி ஒரு கடற்படை அதிகாரியை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார் [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Alexander_Savari/மணல்தொட்டி&oldid=1999977" இலிருந்து மீள்விக்கப்பட்டது