பயனர்:Bro.T.Daniel Peter
ஆசீர்வாதமான சகோதரன் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதி 12:2) பிறப்பு: சகோதரன் டேனியல் பீற்றர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவைச் சார்ந்த ஆழ்வான் துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் 1968 ம் ஆண்டு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் தாமஸ் என்பவர் ஒரு நல்ல தொழிலதிபராக இருந்தார்.தாயார் இராஜம்மாள் தாமஸ் அவர்கள், தனது திருமண வாழ்விற்குப்பின், இயேசு அழைக்கிறார் பிரார்த்தனைப் பெருவிழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சகோ டி.ஜி.எஸ் தினகரன் அவர்கள் செய்தியின் மூலம்,கர்த்தரால் சந்திக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு. ஆண்டவருடைய திட்டமான அழைப்பின்படி எழுப்புதல் ஜெப ஊழியம் என்ற ஸ்தாபனத்தை நிறுவி ஊழியம் செய்து வருகிறார்கள்.தனது சாட்சியான வாழ்வின் மூலம் தனது குடும்பத்தையும்,மற்றும் அநேகரையும் ஆதாயப்படுத்தி வருகிறார்கள்.இப்படிப்பட்ட தாயாரின் ஜெபமே இவருடைய மூத்த மகனாகிய சகோ.டேனியல் பீற்றர் அவர்கள் கா;த்தருடைய வல்லமையான பாத்திரமாக பயன்பட்டுவர காரணமாயுள்ளது. தேவசந்திப்பு: சகோதரன்,கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது 18ம் வயதுவரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றி சரியாக அறிந்துகொள்ளவில்லை.கெட்ட நண்பர்களோடு சேர்ந்து, பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.ஒரு முறை இவருடைய நண்பர்கள் சிலர் சேர்ந்து,மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்று,மதுபானம் அருந்தியபோது, தகராறு ஏற்பட்டு,குறிப்பிட்ட ஒருநபரை அடித்து காயப்படுத்திவிட்டார்கள்.அந்த பிரச்சனை பெரிதாகி,ஜாதி கலவரமாக ஏற்படும் சூழ்நிலை உருவானது.இவருடைய நண்பர்கள் செய்த இந்த தவறுகளுக்கு, இவரும் கூட அதில் சம்பந்தப் பட்டிருந்தார்,என பொய்யான குற்றச்சாட்டு இவர்மேல் விழுந்தது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவித பயம் இவரை ஆட்கொண்டது.தனக்கு மரணம் ஏதும் சம்பவித்துவிடுமோ என பயந்த வேளையில்,இவரிடம் ஒரு சகோதரா; வந்து,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றியும்,இரட்சிப்பு,அபிஷேகம் பற்றியும், வரும் நாட்களில் எப்படியெல்லாம் சகோதரனை,கர்த்தர் பயன்படுத்தப் போகிறார் என்பதையும்,எடுத்துக் கூறினார்.
அதனைக்கேட்ட சகோதரன்,தனது வீட்டிற்குச் சென்று,தனியாக தேவனிடம், முழங்கால் படியிட்டு சுமார் 11/2 மணி நேரமாக ஜெபித்து,தனது பாவங்களையெல்லாம்,இயேசுவிடம் அறிக்கையிட்டார்.அப்போது விவரிக்க முடியாத,அதுவரை தன் வாழ்வில் கண்டிராத பேரின்ப சந்தோத்தை உள்ளத்தில் பெற்றார்.அப்போது மகனே,உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்றும்,இனி நீ பயந்துகொண்டிருந்தபடி உனக்கு எந்த தீங்கும் வருவதில்லை என ஆண்டவர் தன்னோடு பேசுவதை உணர்ந்தார்.அதன்படியே, கிராமத்து மக்களாகக்கூடி வழக்கு விசாரணை நடத்தி,இவருடைய நண்பர்களுக்கு தண்டனை வழங்கினார்கள்.ஆனால் இவருக்கோ அதில் சம்பந்தமில்லை என தீர்ப்பு கூறப்பட ஆண்டவர் கிருபை செய்தார்.அதன் மூலம் ஆண்டவருடைய வழிநடத்துதலை அதிகமாக ருசித்து அவருக்காகவே வாழ தன்னை அர்ப்பணித்தார். பாடுகளின் பாதையில்:
இவ்வாறாக ஆண்டவரை ஏற்றுக்கொண்;ட இவர்.தொடர்ந்து பல மணி நேரங்களை ஜெபத்தில் செலவிட ஆரம்பித்தார்.அதன் மூலம் கிறிஸ்துவின் அன்பால் ஆட்கொள்ளப்பட்டு,இனி முழுவாழ்வையும் கா;த்தருக்காகவே செலவிட தீர்மானித்தார்.உலக வேலைகள் வீடு தேடி வந்தபோதும்,அதனை உதறித்தள்ளினார்.அதினிமித்தம் தகப்பனார் இவரை வெறுத்து துன்பப்படுத்தத் தொடங்கினார்.பல நிந்தைகள்,பரிகாசங்கள்,உலகத்தாரின் பழிச்சொற்களுக்கு ஆளானார்.தனக்கென தனியாக வருமானம் எதுவும் இல்லாததால் தன் தகப்பனாரின் உழைப்பில் சாப்பிட்டு வந்தார்.எனவே தகப்பனாரால் மிகவும் கஷ்டப் பட்டார். உழைத்து சம்பாதிக்க வேண்டிய வயதில் இப்படி ஊழியம்,ஜெபம் என வாழ்வை வீணடிக்கிறானே என அவர் எண்ணினார்.ஆனால் இவரோ தான் எந்த உலக வேலையும் செய்யப்போவதில்லை என்றும்,கிறிஸ்துவுக்காக மட்டுமே பணி செய்யப் போவதாக முடிவெடுத்துவிட்டார்.ஒரு பக்கம் இது தனது அறியாமை என்பதை சகோதரன் பல ஆண்டுகளுக்குப்பின் அநுபவத்தால் உணர்ந்தார்.இந்த குழப்பத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். தான் எங்குபோவது, எங்கு தங்குவது என அறியாத சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக,ஆரம்பத்தில் இவருக்கு நற்செய்தி சொன்ன சகோதரன் இவரை சந்தித்து,உன் தகப்பனார் உன்னை ஏற்றுக் கொள்ளும்வரை நீ என் வீட்டில் தங்கி ஊழியம் செய் என அழைத்துப்போனார்.
அற்புதம் நடந்தது:
அந்நாட்களில் தகப்பனார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது, ஏன் என தகப்பனார் யோசித்தபோது, கா்த்தா் தகப்பனாரோடு பேசினார்.என் மகனை எனக்காக ஊழியம் செய்ய அர்ப்பணித்தால்தான்,தொழிலை நான் ஆசீர்வதிப்பேன்.இதுவே நஷ்டத்திற்கு காரணம் என கா;த்தா; தகப்பனாரோடு பேசினார். தவறை உணர்ந்த தகப்பனார், உடனே சகோதரன் வீடு திரும்பும்படியும்,தொடர்ந்து கா;த்தருக்காக ஊழியம் செய்யும்படியும் அர்ப்பணித்தார்.அதன்பின் சகோதரன், தகப்பனாரோடு சமாதானமானார். தொடர்ந்து ஜெபிப்பதிலும்,வேதத்தை தியானிப்பதிலும் அதிக நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.தனது தாயாரோடு இணைந்து சிறு,சிறு ஜெபக்கூட்டங்களில் கா;த்தருடைய வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.அதன்பின் 1993 ம் ஆண்டு சகோதரி பொன்செல்வி ஜெபசீலி என்ற பெண்ணை சகோதரனுக்கு பெற்றோராகப் பெண்பார்த்து,திருமணம் முடித்து வைத்தார்கள்.
திருமணத்திற்குப் பின்னும் சரியான வருமானமில்லாமல், கா்த்தரை மட்டுமே சார்ந்து, குடும்பமாக விசுவாச வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள்.அதனால் பசி,பட்டினி,வறுமை இவைகளின் பாதையில் கா;த்தா; வழிநடத்தினார். இதனிடையே எப்சிபா ராஜாத்தி,மெர்சி சன் என்ற இரு பெண் குழந்தைகளை கா்த்தா் கொடுத்தார்.இரண்டு பெண் குழந்தைகளாயிற்றே,இவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம்,எப்படி படிக்க வைப்போம் என்ற கவலை சகோதரனையும்,சகோதரியையும் அதிகம் வாட்டியது.வேறு மனுஷீக உதவிகளும் கிடைக்கவில்லை.அதன்பின் ஏதாவது உலக வேலை பார்த்து பிழைக்க வேண்டியதுதான் என்ற சோதனை வந்தது.அதற்கு முயற்சி செய்ய தனது படிப்பு சான்றிதழைத் தேடினால் அது காணாமல் போயிருந்தது.இப்போதுதான் தனக்கு வீடு தேடி வந்த வேலைகளை, உதறியது தவறு என சகோதரன் உணர்ந்தார்.முழுநேர ஊழியத்திற்கு அழைக்கப் பட்டாலும்,வேளை வரும்வரை உலக வேலை செய்துகொண்டே ஊழியம் செய்வதே தேவசித்தம் என அறிந்து கொண்டார்.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ நாலுமாவடி பகுதிக்கு சபை ஊழியம் செய்ய அழைப்பு வந்தபோது,குடும்பமாக புறப்பட்டு கீழ நாலுமாவடி என்ற கிராமத்திற்கு வந்தார்கள். அங்கு 10 ஆண்டுகள் சபை ஊழியத்தை செய்துகொண்டே சுவிசேஷகராகவும் கா்த்தா் பயன்படுத்தத் தொடங்கினார்.படிப்படியாக வறுமைகள் மாறியது,வாழ்விலும் ஊழியத்திலும் ஆசீர்வாதங்கள் பெருக ஆரம்பித்தது.
பல தூர இடங்களுக்கெல்லாம் கா்த்தா் கொண்டு சென்று சகோதரனை பயன்படுத்த ஆரம்பித்தார்.பல தேவ ஊழியர்களோடு நல்ல ஐக்கியத்தைக் கா்த்தா் கொடுத்தார்.விசேஷமாக மரியாதைக்குரிய அண்ணன் சகோ மோகன்.சி.லாசரஸ் அவர்கள்,கனத்திற்குரிய தீர்க்க தரிசி அண்ணன் வின்சென்ட் செல்வ குமார் மற்றும் பல தேவ ஊழியர்களோடு இணைந்து ஊழியம் செய்யும் பாக்கியத்தைக் கா்த்தா் கொடுத்தார்.
வேலை வந்த போது,சபை ஊழியத்தை விட்டு,விட்டு முழு நேர சுவிசேஷகராக கா்த்தா் பயன்படுத்தத் தொடங்கினார். தேவ திட்டத்தின்படி 2007 ம் ஆண்டு முதல் இயேசு ஆசீர்வதிக்கிறார் எழுப்புதல் ஊழியங்கள் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பிக்கவும், வடமாநிலங்களுக்கு மிஷனெரிகளை அனுப்பவும்,ஆதிவாசி மற்றும் ஏழைப்பிள்ளைகளை ஆதரிக்கவும்,முதியோர்களை பராமரித்து வரவும், கா்த்தா் கிருபை செய்து வருகிறார்.(ஊழிய விபரங்களை ஊழியங்கள் பகுதியில் பாருங்கள்) சுமார் 20 ஆண்டுகள் பலவித பாடுகளைக் கடந்து வந்தபின், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என பரிசுத்த வேதாகமம் கூறுவதுபோல சகோதரனை கர்த்தர் ஆசீர்வாதமான சகோதரனாக மாற்றினார்.இப்போது அவர் மட்டுமல்ல ஆசீர்வாதமான இவர் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார். எல்லா மகிமையும் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே உண்டாவதாக,ஆமென். நீங்களும் ஆசீர்வாதமாக மாற உங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுமானால், சகோதரனோடு எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு முகவரி: : சகோ.தா.டேனியல்`பீற்றர்,இயேசு ஆசீர்வதிக்கிறார் எழுப்புதல் ஊழியங்கள், குரும்பூர்-628207, தூத்துக்குடி மாவட்டம்-தமிழ்நாடு தென் இந்தியா. அலை பேசி எண்கள்: 09788132008, Bro T.DANIEL PETER, JESUS BLESSES REVIVAL MINISTRY, KURUMBUR-628207.TAMIL NADU. S.INDIA. Mail: danielpeter2010@gmail.com,