பயனர்:Nadaa Sivaa
தோற்றம்
நடா சிவராஜா அவர்கள் யாழ்குடாவின் வடமேல் துருவ தீவக தர்பத்தில் பிறந்து உயர்கல்வி வரை யாழ் மண்ணிலே கற்றுத் தேர்ந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர் சிறு வயது முதல் தமிழ் மொழி மேல் அதீத காதல் கொண்டவர். சிறு பிராயம் முதல் கவிதை எழுதும் ஆற்றல் மிகுந்தவர். இவர் எழுதிய பல புதுக்கவிதைகள் இலங்கையில் இருந்து வெளியாகும் பிரபல தினப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.இவரின் பன்னிரண்டு வயதில் எழுதிய முதல் கவிதை 1976 ஆம் ஆண்டு வீரகேசரி வாரமஞ்சரியில் வெளியானது . அதைத் தொடர்ந்து பல சிறுகதைகள் நாடகங்கள் ஈழத்துப் பாடல்கள் என பல துறைகளிலும் தனது மொழிமேலுள்ள ஆர்வத்தினை வெளிக் காட்டியுள்ளார். இவரின் முதல் கவிதைத் தொகுதியான " தீர்த்தக் கரையினிலே " மிக விரைவில் வெளிவரவுள்ளது.