பழிபாவம்
தோற்றம்
சொல் பொருள்
பழி – பொருந்தாச் செயல் செய்தலால் இம்மையில் உண்டாகும் பழிப்பு. பாவம் – தீவினை செய்தலால் மறுமையில் உண்டாகும் தீயநிகழ்வு.
விளக்கம்
பழி-வசைச்சொல்; பழியஞ்சித்தேடிப் பகுத்துண்ண வேண்டும் என்பார் வள்ளுவர். ‘பழியோரிடம் பாவமோரிடம்’ என்பதில் பழி என்பது பழிக்கு ஆளாம் குற்றத்தைக் குறித்தது. பாவம் என்பது தண்டனையைக் குறித்தது. பாவம்-அகன்றது; அகன்று செல்வது என்னும் பொருளது. ஒன்றைத் தொட்டு ஒன்றாக விரிந்து கொண்டே வரும் தீவினைகளை இயற்றுவது பாவமாகும். முன்னதிற் பின்னது கொடுமை மிக்கது என்பது கருதுக.