மாரிமூலை
தோற்றம்
விளக்கம்
மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். வடகிழக்கு மூலை.
மாரி=மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். அது, வடகிழக்கு மூலையாகும். அங்கே மேகம் திரண்டால் மழைவரும் என எவரும் அறிவர். உழவர் வழக்கு இது. இது ஒரு வழக்குச் சொல்