வம்பு தும்பு
தோற்றம்
வன்பு துன்பு(வம்பு தும்பு)
சொல் பொருள்
வன்பு – வல்லாண்மையால் துயரூட்டல். துன்பு – வல்லாண்மையின்றியும் சொல்லாலும் கரவாலும் துயரூட்டல்.
விளக்கம்
“வன்பு துன்புக்குப் போகாதே; வன்பு துன்புகளில் மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகளாம். வன்படியாக என்பது ‘வம்படியா’ என வழங்குவது போல வன்பு ‘வம்பு’ எனவும் துன்பு ‘தும்பு’ எனவும் வழங்குகின்றனவாம். இனி, ‘வம்பு பொய்யும் வஞ்சமும் கலந்ததாம். அதனையோ, துன்புறுத்தலையோ கொள்ளாதே என்றுமாம்.