வாய்க்கரிசி போடல்
தோற்றம்
வாய்க்கரிசி போடல்
சொல் பொருள் விளக்கம்
இறந்தவர்க்குச் செய்யும் கடமைகளுள் ஒன்று வாய்க்கரிசி போடல் என்பது. இறந்தவர் பயன்படுத்திய பொருள்களைக் கடைசி முறையாகப் படைப்பது என்னும் வகையில் நேர்ந்த வழக்கு அது. ஆனால் உழையாமல் உண்பவர்க்கோ வெறுப்புடன் சோறு படைக்கப்படுபவர்க்கோ தரும் சோற்றைச் சோறு எனச் சொல்வது இல்லை. வெறுப்பினால், “உனக்கு வாய்க்கரிசி போடுகிறேன்” என்பர். வாய்க்கரிசி, கடைசிச்சோறு, ஒவ்வொரு நாளும் வைதுகொண்டே வாய்க்கரிசி போட்டால் முதலேது முடிவேது?