ishtalingam
ஆங்கிலம்
[தொகு]இஷ்டலிங்கம்
பெயர்ச்சொல்
[தொகு]ishtalingam
லிங்கம் என்பது அடையாளம் (குறி) என்று பொருளாகும். லிம் என்பது அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள். கம் என்பது ஒடுங்கிய அனைத்தும் மீண்டும் தோன்றுமிடம் என்று பொருள். காணவே முடியாது என்று கருதப்படும் இறைவனை காண்பதற்கு உரிய அடையாளமே லிங்கம். இது சிவனின் திருவுருவமாகும். இந்த உயிர்கள் வாழும் அண்டமும், அந்த அண்டம் தோன்றும் பிரபஞ்சமும் லிங்க வடிவமே. லிங்கத்தில் தோன்றிய உயிர்கள் மீண்டும் அந்த லிங்கத்தையே வணங்கி வழிபட்டு மீண்டும் அந்த லிங்கத்தின் உள்ளேயே சரணடைய வேண்டும் என்று ரிஷிகள் லிங்க வழிபாட்டில் கூறுகிறார்கள். சிவலிங்கத்தின் வகை: சிவலிங்கமானது பரார்த்த லிங்கம், இஷ்டலிங்கம் என இருவகைப்படும். இதில் பரார்த்த லிங்கத்தில் 1.சுயம்பு, 2.கானம், 3.தைவிகம், 4.ஆரிடம், 5.மானுடம் என ஐந்து வகையுண்டு. 1. சுயம்புலிங்கம்: இவ்வகையான லிங்கங்கள் தானே தோன்றுவது. 2. கானலிங்கம்: அம்மன், விநாயகர், முருகன், ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்படுவது. 3.தைவீகலிங்கம்: பிரம்மா, விஷ்ணு, ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்படுவது. 4. ஆரிடலிங்கம்: ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்படுவது. 5. மானுடலிங்கம்: மானிடர்களால் அமைக்கப்படுவது. அடுத்தது இஷ்ட லிங்கம்: இந்த லிங்கம் குருபரம்பரையின் உபதேசப்படி தீட்சை பெற்ற சீடர், அடியேன் இந்த உடலில் உயிர் உள்ளவரை சிவபூஜை செய்யாது உணவு உண்ண மாட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்து வழிபடுவதாகும். லிங்கத்தில் மும்மூர்த்திகளும் அடக்கம்: சிவலிங்கத்தில் ஆவுடையின் மேல்பகுதி சிவபாகமாகவும், நடுப்பகுதி விஷ்ணுபாகமாகவும், அடிப்பகுதி பிரம்மபாகமாகவும் காணப்படுகிறது