ஒவ்வோர் எழுத்தும் தனித் தன்னிறைவு அலகாக அமைந்து தனக்கென தொடக்க, முடிவு துண்மிகளைக் கொண்டதாக தரவுகளை அனுப்பும் முறை. ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி வெவ்வெறாக இருக்கும். கணினிக்கும், இணக்கிக்கும் இடையில் இத்தகைய தரவு அனுப்பும் முறையே உள்ளது. ஒரு இணக்கி வேறொன்றுக்குத் தரவுகளை அனுப்பும் போது நேரச் சீர்மையைக் கடைப்பிடிக்கலாம்.