ஐங்குறுநூறு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் (தமிழ்)[தொகு]
- ஐங்குறுநூறு (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு[தொகு]
(ஆங்) -
- Ainkurunuru (an old thamizh literary book)
வகைப்பாடு[தொகு]
எட்டுத் தொகைநூல்கள்[தொகு]
விளக்கம்[தொகு]
- ஐங்குறுநூறு அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு[தொகு]
ஐந்து திணைகளுக்கும் அகப்பொருள் பற்றிய நூறு நூறு (5 x 100 = 500) குறும் பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இவற்றுள் 129, 130 ஆம் பாடல்கள் கிடைக்கவில்லை.
இயற்றியோர்[தொகு]
- குறிஞ்சித் திணை = கபிலர்; முல்லைத் திணை = பேயனார்; மருதம் திணை = ஓரம்போகியார்; நெய்தல் திணை = அம்மூவனார்; பாலைத் திணை = ஓதலாந்தையார்.
காலம்[தொகு]
கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா[தொகு]
- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/03-ainkurunuuru.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
பதிற்றுப்பத்து