கர்ணகடூரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கர்ணகடூரம் , பெயர்ச்சொல்
- காதுக்குக் கடுமையான, துன்புறுத்தும், கேட்கக் கூசும் சொல் அல்லது ஒலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which unpleasant to hear; harsh, jarring, discordant sound
விளக்கம்
பயன்பாடு
- 'கர்ணம்’ என்றால் சம்ஸ்கிருத மொழியில் 'காது’ என்று பொருள். (உ-ம்: கஜகர்ணம் - யானைக் காது). காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்குக் கடுமையான சொற்களைக் 'கர்ணகடூரம்’ என்று கூறுகிறோம். (மதன் கேள்வி பதில், ஆனந்தவிகடன், 29 டிச 2010)
- கொடூரம் என்பது செயல். கடூரம் என்பது சொல். கடுமையான, துன்புறுத்தும் சொற்கள் என்று அர்த்தம். கர்ணன் மகாவீரன். பெரும் வள்ளல். விசுவாசம் மிகுந்தவன். ஆனால், அவன் கொடியவனுக்கு விசுவாசமாக இருந்தான். தனக்கு மாதவிலக்கு என்று கெஞ்சியும் திரௌபதியை விடாமல் சபைக்கு இழுத்து வந்து, புடவையை துச்சாதனன் களைய முனைந்தபோது, கர்ணன் அதை ஆதரிக்கிறான். துரியோதனன், தன் தொடையில் அவளை அமரச் சொன்னபோது, திரௌபதி கதறிப் பின் வாங்குகிறாள். கர்ணன் அவளைப் பார்த்து இகழ்ச்சியோடு 'ஐந்து பேருடன் படுத்துக்கொள்கிறவள் நீ. உனக்கு என்ன மானம், ரோஷம் வேண்டிக்கிடக்கிறது? துச்சாதனா! துரியோதனன் மடியில் அவளை இழுத்து உட்காரவை!' என்று, மேலும் கடூரமான வார்த்தைகளால் அவளை ஏசுகிறான். சபையில் இருந்த பெரியவர்கள் காதைப் பொத்திக்கொள்கிறார்கள். அதுவே கர்ணகடூரம்! (மதன் கேள்வி பதில், ஆனந்தவிகடன், 1 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கர்ணகடூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +