இந்து வேத மரபின்படி ஏரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...பூமிக்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழ் ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்...பூமியையும் சேர்த்து பதினான்கு உலகங்கள்... எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு இவ்வுலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் என்னும் ஓர்ஆமைகளின் அரசன் தாங்குகிறது என்றும் நம்பப்படுகிறது...இந்த ஆதிகூர்மம் அகூபாரன் என்றும் குறிப்பிடப்படுகிறது...