இதொரு மிகக்கொடிய விடமுள்ளப் பாம்புவகை...ஆப்பிரிக்காக் கண்டத்தின் வட பகுதியும், மத்தியக்கிழக்கு பகுதிகளும் இதற்குத் தாயகம்...மணலின் நிறத்தையேக் கொண்டிருப்பதால், இரைப் பிராணிகள் காணாதவாறு, தன்னைக் கற்பாறை அல்லது புதர்களுக்கு அருகே மணலினடியில் உடலை மறைத்துக்கொண்டு , தலையைமட்டும் சற்றே வெளியே நீட்டிக்கொண்டு, கிட்ட வரும் சிறுபறவைகள் அல்லது எலிகளின்மீது திடீரென்றுப் பாய்ந்துப் பிடித்து, அவைகளை உணவாக்கிக்கொள்ளும்...இதன் தலையில் ஒவ்வொரு கண்ணுக்கும் மேல் கொம்பு போன்ற அமைப்பு இருக்கின்றன...கொம்பில்லாத வகைகளுமுண்டு...