பற்பல இனபேதங்களைக் கொண்ட ஆந்தைகளில், உலகிலேயே உயரமான,பெரிய உருக்கொண்ட ஆந்தை பெரு சாம்பறாந்தைஆகும்...உலகெங்கிலும் பூமத்திய இரேகைக்கு வடபுறம் காணப்படுகிறது...இது ஓர் இரவு நேரப் பறவை...சாம்பற் நிற முகத்தோடு வட்டவடிவான தலையுடன் மஞ்சள் வண்ணக் கண்களோடு, அக்கண்களைச் சுற்றி கருங்கோடு உள்ளதாக இருக்கிறது...உடலின் மேற்புறம் முழுதும் சாம்பற் நிறமும், நிறம் வெளுத்த நீள்பட்டைகளும் உடையதாக யிருக்கிறது.