பேச்சு:கும்மிருட்டு
தலைப்பைச் சேர்அடர்ந்த இருளுக்கு, கும்மிருட்டுக்கு வீங்கிருள் என்றும் பெயர்.
- திருஞான சம்பந்தர் திருஓமமாம்புலியூர் என்னும் ஊரில் பாடிய தேவர்ப்பபடலில்
- பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
- வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம்
என்று கூறுகின்றார். ஒன்பதாம் திருமுறையில் திருவிடை மருதூரில்
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
என்றும், திருமொழியில்
மின்னொத்த நுண்ணிடை யாளைக் கொண்டு* வீங்கிருள் வாயென்றன் வீதி யூடே பொன்னொத்த வாடைகுக் கூட லிட்டுப் போகின்ற போதுநான் கண்டு நின்றேன்*
என்றும் ஆளப்பட்டுள்ளது
--செல்வா 18:55, 1 ஆகஸ்ட் 2010 (UTC)