இறந்தவர்களின் பிணத்தை எரிக்க/புதைக்க சுடு/இடு காட்டிற்குத் தூக்கிச்செல்லும் சற்று முன்பாக இறந்தவரின் உறவினரும், உற்ற நண்பர்களும் வரிசையாக நின்று, அந்தப் பிணத்தின் வாயில் சிறிது அரிசியைப் போடுவது இந்துக்களின் தொன்றுதொட்டு வரும் ஒரு வழக்கம்...இச்செயலானது 'இதோடு இவ்வுலகில் நம் சொந்த, பந்தங்கள், சம்பந்தம், பாசம், நட்பு ஆகியன முற்றுலுமாக அற்றுப்போய்விட்டன' என்பதை மிக்க சோகத்துடன், துக்கத்துடன், வருத்தத்துடன் தெரிவிக்கும் துயரமிக்க ஓருச் சடங்காக விளங்குகிறது...இதையே வாய்க்கரிசிப் போடுதல் என்றும் சொல்வர்...