காக்காக்குப் போடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காக்காக்குப் போடுதல்:
போட்ட உணவைத் தின்னும் காக்கா
காக்காக்குப் போடுதல்:
கிடைத்த உணவை உண்ணும் காக்கா
காக்காக்குப் போடுதல்:
காக்கை வாகனத்தில் சனி பகவான்
காக்காக்குப் போடுதல்:
சனி பகவானும், அவருடைய காக்கை வாகனமும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காக்காக்குப் போடுதல், வினைச்சொல்.
  1. காகத்திற்கு உணவளித்தல்
  2. காக்காய்க்குத் தீனி கொடுத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to feed crows
  2. to give food to crows

விளக்கம்[தொகு]

  • இஃதொருப் பேச்சு வழக்குச் சொற்றொடர்...இந்துச் சமயத்தவருக்குக் காகப்பறவைகளுக்கு உணவளிப்பதென்பது ஒரு புண்ணிய காரியமட்டுமல்லாது ஒரு கடமையுமாகப் பார்க்கப்படுகிறது...இந்தச்செயலை காக்காக்குப் போடுதல்/ காக்காக்கு வைப்பது என்றுச் சொல்வர்...
  • இந்துக் குடும்பங்களில் முதலில் காகங்களுக்கு உணவளித்து, அவைகளின் பசி தீர்ந்த பின்னரே குடும்பத்தினர் சாப்பிடும் வழக்கம் இன்றளவும் சில இடங்களில் அனுசரிக்கப்படுகிறது...இதனால் முன்னோர்கள் மனமகிழ்ந்து, திருப்தியடைகின்றனர் என்று கருதப்படுகிறது...
  • காகங்கள் நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றன...இறந்தவர்களுக்குத் தரும் திதிகொடுத்தல், திவசம் செய்தல் முதலியக் கருமங்களில், காகங்களுக்கு அளிக்கப்படும் உணவை, அவை உடனே வந்துத் தின்றால், இறந்துபோன முன்னோர்களே வந்து சாப்பிட்டுத் திருப்தி அடைந்ததாக பெருமகிழ்ச்சிக் கொள்வர்
  • மக்களின் உடற்நலத்திற்கும், நீடித்த ஆயுட் காலத்திற்கும் அதிபதியான சனி பகவானுக்கு வாகனம் என்பதாலும், இறப்பின் இறைவனான இயமதர்மராசனுடைய பிரதிநிதியென்பதாலும் காகங்களுக்கு உணவளிப்பதால், இவர்கள் மகிழ்வுற்று, நீடித்த ஆரோக்கியமான வாழ்வைத் தருகிறார்களென இந்துக்களால் நம்பப்படுகிறது...சனி பகவானால் ஏற்படும் துன்பங்களும், துயரங்களும் குறையுமாம்!
  • இன்னொரு வகையில், நேரம் ஒதுக்கி, பணச்செலவுச்செய்து, பிறருக்கு உணவளிக்கமுடியாத நிலையில், நாம் வழக்கமாக உணவுட்கொள்ளும்போதே, ஏதோவொரு உயிரினத்திற்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் புண்ணியப் பலனும், சம்பந்தப்பட்ட கடவுட்களின் {சனி பகவான் மற்றும் இயமன்) அருளும் கிடப்பதால், காக்காக்குப் போடுதல் மிகச் சிறந்தவொருச் செயலாகப் பார்க்கப்படுகிறது...
  • மேலும், காக்கைகள் நச்சுப்பொருளுக்கு விரைவில் இரையாகிவிடும் தன்மை கொண்டிருப்பதாக எண்ணப்படுவதால், நாம் உண்ணும் உணவில் ஏதாவது நஞ்சு, நமக்குத் தெரியாமல் கலந்திருந்தால், காகங்களுக்கு முதலில் உணவைப்போடுவதால், அவை உணவை உண்டவுடன் நச்சுக்கலப்பு விடயம் தெரிந்துவிடுமென்றும் ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காக்காக்குப்_போடுதல்&oldid=1452623" இலிருந்து மீள்விக்கப்பட்டது