ஆறாம் வேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆறாம் வேதம் போற்றும் இறைவன் பரமசிவன்
ஆறாம் வேதம் போற்றும் இறைவன் பரமசிவன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆறாம் வேதம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சைவ சமயத்தினரின் திருமுறை என்னும் புனிதநூல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. hindu holy verses by nayanmars, in tamil, praising lord shiva a hindu god.

விளக்கம்[தொகு]

  • கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வாழ்ந்த சைவ சமயக் குரவர்களான நாயன்மார்களால் இயற்றப்பட்ட இறைவன் பரமசிவனின் புகழ் பாடும் பாக்களின் தொகுப்பாக பன்னிரு பகுதிகளைக்கொண்ட நூல் திருமுறை எனப்பட்டது...திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட இருபத்துஏழு சைவக் குரவர்களின் 18,280 பாக்களைக்கொண்டது...திருமுறையில் மிகப்புகழ்மிக்க தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றின் பாக்களும் அடக்கம்...தென்னாட்டு சைவர்களின் மிகப் புனிதமான இந்த நூல் ஆறாம் வேதம் என்று கொண்டாடப்படுகிறது. முதல் நான்கு வேதங்கள் ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாகும்... ஐந்தாவது வேதம் ஸ்ரீமத் பகவத்கீதை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறாம்_வேதம்&oldid=1225695" இலிருந்து மீள்விக்கப்பட்டது