நாய்ப்பிழைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாய்ப்பிழைப்பு

சொல் பொருள் விளக்கம் நாய் நன்றியறிவு மிக்கதாம் உயர்வுடையதாக மதிக்கப்படுகிறது. ஆனால் நன்றி மறக்க வல்லது நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படியாக இருந்துவிடுவதும் அதற்கு வழக்கமே. அதனால்தான் “நாய்க்குகன் என்றெனை ஓதாரோ” என நன்றி மறப்புச் சான்றாக நாயைக் குகன் வழியே கம்பர் குறித்தார்.

மற்றும், நாய் எத்துணைப் பொருள் கிடைப்பினும் இழிபொருள் எச்சில் இலை தேடலை விடுதல் இல்லை; வேலையின்றி ஓயாதலை தலை ஒழிதலில்லை; தன்னினத்தைக் கண்டால் காரணம் இல்லாமலே குரைத்தல் கடித்துக் குதறுதல், உண்டதைக் கக்கி அதனைப் பின் உண்டல் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பதில்லை. ஆகலின், இவற்றைக் குறித்தே இழிவுப்பொருள் ஏற்பட்டதாம். அதனால், ‘இது என்ன நாய்ப் பிழைப்பு’ என வழக்கு மொழி உண்டாயிற்று.

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாய்ப்பிழைப்பு&oldid=1913013" இலிருந்து மீள்விக்கப்பட்டது