பகுப்பு:Public domain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நிலக்கோட்டை வரலாறு:

'பீஜப்பூர் சுல்தான் மற்றும் கிருஷ்ண தேவராயர்க்கும் நடந்த போரில் உதவிய தளபதி மக்காள நாயக் . அவரை திண்டுக்கல் மதுரபுரிக்கு நேற்மேற்கே 30கி.மி தொலைவில் என்றும் நிலைக்கும் படி ஒரு கோட்டை போட்டு ஆட்சி செய்ய சொன்னார் ராயர்.அதன் படியே மாக்காள நாயக்கரும் அவருடைய. குமாரர் கூளப்ப நாயக்கரும் என்றும் நிலைக்கும் படி கோட்டை கட்டி (1512)அந்த கோட்டைக்கு நிலக்கோட்டை என்று பெயரும் வைத்தனர்.

வீர சேகர சோழன் என்ற ஒருவன் மதுரை மீது போர் எடுத்து வந்தான்.அப்போது மதுரைக்கு அதிபதியாய் இருந்த சந்திர சேகர பாண்டியன் என்ற பாண்டியன் ராயர் உதவியை நாடினார்.ராயர் நாகம நாயக்;கூளப்ப நாயக் அழைத்து பாண்டியனுக்கு உதவ உத்தரவு செய்தர்.சோழவந்தான் பகுதியில் போர்.சோழன் தோற்று ஓடினான்.பாண்டியன் நாகம நாயக்கரை ஆட்சி செய்ய சொன்னார் மதுரையை.பின் நாளில் நாகம நாயக்கர் முறை கேடாக மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்வதாக ராயருக்கு ஓலை அனுப்பினான்.ராயருக்கு கோபம் நாகம நாயக் மீது.மதுரை நாகம நாயக்கை கைது செய்ய நாகம நாயக் குமாரர் விஸ்வ நாத நாயக் மதுரை வந்து தன் தந்தையை கைது செய்தார்.கைதி செய்தார் என்று சொல்வதை விட அவர் தன் மகனுக்காக சரண் அடைந்தார் என்று சொல்லலாம.

விஸ்வநாத நாயக்கருக்குப் பின்பு முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1554-72) இவருக்கும் கூளப்ப நாயக்கருக்கும் நல்ல உறவு இருந்தது.அப்போது தொட்டியர் தலைவர் தலைவரானது தும்மச்சி நாயக்கன் மதுரை மாமன்னர் எதிர்த்து தன்னாட்சிகோரி தனது நண்பன் இலங்கை அரசனோடு சேர்ந்து பரமக்குடி கோட்டையும் கைபற்றி கொண்டு கொக்கரித்தான்.கொக்கரித்தவனை அடக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்று தும்பச்சி நாயக்கனை கொன்றார் பின் மதுரை படையுடன் நவபாஷன துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மன்னார் துறைமுகத்தில் இறங்கினார்;அங்கு நடந்த போரில் கண்டி அரசன் கொல்லப்பட்டான். பல வருடங்களுக்கு பின்னர(1639) சடைக்கத் தேவர் சேதுபதி மதுரைக்கு திறை செலுத்துவதை நிறுத்தி கொண்டார்.அவரை சிறை பிடிக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்றார்.மிகவும் உக்கிரமாக நடந்த 67 நாள் போரில் மறவ படைத் தளபதி வன்னியத்தேவன் வெட்டி கொல்லப்பபட்டார்.நாயக்க படையில் விருப்பாட்சி நாயக்கன் ;காமாட்சி நாயக்கன்;வெங்கம நாயக்கனும் வெட்டி கொல்லப் பட்டனர்;போரில் சடைக்கத் சேதுபதி தலைமன்னாருக்கு (இராமேஷ்வரம்)தப்பி ஓடிவிட்டார். தலைமன்னனாருக்கு செல்ல அப்பொழுது படகு வழியே மட்டுமே செல்ல முடியும் எனவே அங்கு செல்ல அணை கட்டி ;அவரை பிடித்ததால் கூளப்ப நாயக்கருக்கு 'தண்டு கூளப்ப நாயக் 'என்று பெயர் கொடுத்தார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் எண்பதாயிரம் போர் வீரர்கள்;6000 குதிரைகள்;700 ஒட்டகங்கள்;6000 மெய்க்காவலர்கள் இருந்தனர் மறவப் படையில் 40000 வீரர்கள் இருந்தனர்.

வெள்ளைகார்க்ளுடன் போர்:

திண்டுக்கல் ஐதர் அலிக்கு கீழ் வந்த போது நிலக்கோட்டை யும் மைசூர் அரசுக்கு கீழ் சென்றது.பின்னர் ஒரு உடன்படிக்கையின் படி ஆங்கில அரசுக்கு கீழ் சென்றது கடும் வறட்சி ;மழை இல்லாததாலும் கிஸ்தி கட்ட முடியவில்லை. மக்களை துன்புறுத்த ஆரம்பித்தனர் ஆங்கில அதிகாரிகள் ;இது கூளப்ப நாயக்கர் காதுக்கும் எட்டியது.அந்த அதிகாரியை கொல்ல திட்டம் வகுக்கபட்து.மதுரையில் இருந்து குதிரையில் வரி வசூல் செய்ய வந்த அதிகாரி முசுவனூத்து அருகே வெட்டி கொல்லபட்டான்..அந்ந இடத்திற்கு சட்டைக் காரன் மேடு என்று இன்று அழைக்க படுகிறது. (சட்டைக் காரன்= வெள்ளைக்காரன்) நம் ஆண்களுக்கு அன்று மேல் சட்டை அணியும் பழக்கம் இல்லை) இந்த சம்பவம் ஆங்கிலேயரை கோபம் அடைய செய்தது. மேலும் ஆங்கில அரசு தடை செய்த போர் கருவிகளை கூளப்ப நாயக்கர் வைத்து இருந்ததால் ஆங்கில அரசு நிலக்கோட்டையை பிடிக்க் வந்தது.கூளப்ப நாயக் ஆங்கில அரசுக்கு எதிராக போரை அறிவித்தார்(1797) .அதற்காக 10000 கள்ளன்களை ஆனையூரிலிருந்து(ஆனைமலை கள்ளன்கள்) கூப்பிட்டு வந்தார்.இந்த போரில் கூளப்ப நாயக் கொரில்லா போர் முறையை பின்பற்றினார்.பல முனையிலிருந்தும் ஆங்கில வீரரர்கள் தாக்கப்பட்டார்கள்.நிலைகுலைந்த ஆங்கில அரசு அடுத்த நாள் பல வீரர்களை மதுரையிலிருந்து வரவழைத்தது.மீண்டும் ஒரு வாரம் கழித்து கலெக்டர் தலைமையில் ஒரு படை வந்தது.கலெக்டருக்கு யரோ ஒருவன் கோட்டையின் வரைபடம் கொடுத்ததன் காரணமாக ஆங்கியேரின் பலம் ஓங்கியது.இறுதியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.கூளப்ப நாயக் தப்பி ஓடிவிட்டார்.ஆங்கில அரசு கூளப்ப நாயக் பிடித்து தருவோர்க்கு 1000 வராகன் பொன்னும்;பிள்ளைகள் மனைவியை பிடித்து தருவோர்க்கு 500 வராகன் பொன்னும் அறிவித்தது.மூன்று வருடங்களாக அவரை பிடிக்க் முடியவில்லை.அதனால் ஆங்கில அரசு கூளப்ப நாயக்கர் மனைவி ;மக்கள் பிடிபட்டானர் என்ற பொய்யான தகவலை பறை சாற்றினர்.நாயக்கர் காதுக்கும் இது எட்டியது.பதறிப் போனார் நாயக்கர். வேறு வழியின்றி சரணடைய எஎண்ணி கலை கூத்தாடி வேஷம் போட்டு சென்றார்.ஆங்கில அதிகாரிகளில் பிடிக்க பட்டு சிறையில் அடைக்கபட்டு குதிரைக்கு கொள் வைக்கும் வேலை நாயக்கருக்கு கொடுக்கபட்டது.தூக்கில் போட்டால் கிளர்ச்சி செய்வார்கள் என்ற பயமும் மற்றும் வீரத்திற்காக அவரை விடுதலை செய்தது.ஆனால் அவருடைய சொத்துகள் அனைத்தையும் ஏலம் விட்டது.அவருடைய சொத்துகளுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத ஆங்கில அரசு அவருடைய சொத்துகளை ஏலம் விட்டது கொடுமையிலும் கொடுமை . குறிப்பு;:- நமது மறக்கபட்ட மன்னர்கள்......=>நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர்;மணப்பாறை லக்க நாயக்கர் , நெற்கட்டும்செவல் பூலித்தேவர், நத்தம் விருமாண்டி தேவர் , பெத்த நாயக்கனூர் எட்டயபுரம் தளபதி வீரன் அழகுமுத்துக் கொண்சேர்வை போன்றோர் ஆங்கிலேய உதவிபெற்ற யூசுப்கானை தாக்கி இந்திய விடுதலை வரலாற்றில் முதல் முதலில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து தங்களுக்கான இடத்தை வரலாற்றில் பதிவு செய்தனர் . பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள் , கமுதி தேவர் , விருபாட்சி கோபால நாயக்கர் , தீரன் சின்னமலை , ஊமைத்துரை , தேவதானப்பட்டி லட்சுமி நாயக்கர் , என்று ஆங்காங்கே புரட்சி வெடித்து இந்திய விடுதலை கிடைத்தது .வீரபாண்டிய கட்டபொம்மன் மறைவிற்கு பிறகே பல பாளையங்கள்ஆங்கிலேயனை எதிர்க்க ஒன்று சேர்ந்தது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பாளையக்காரகளின் பங்கு அதிகம் ஆனால் அவர்களை பற்றி வெளி வந்த செய்திகள் மிக குறைவே ... நிலக்கோட்டை பாளையக்காரர் கூளப்ப நாயக்கருக்கு ஆங்கில அரசை மூன்று வருடமாக எதிர்த்த பெருமை உண்டு.


நாகமகூளப்ப நாயக்கர் (நிலக்கோட்டை பாளையக்காரர்)மீது சுப்ரதீபக்கவிராயர் என்ற புலவர், ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலுக்குகூளப்பநாயக்கன் விறலி விடுதூதுஎனப்பெயர். இது மதுரையை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (ராணி மங்கம்மாள் பேரன்)ஆண்ட காலத்தில் எழுதப்பெற்றது. கி. பி. ஆயிரத்து எழுநூற்றி இருபத்தைந்தைச் சார்ந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்க்கால் மண்டபத்தில் ஒரு நாட்டியப்பெண் ஆடியதாக இந்நூல் கூறுகிறது. அவள் தொடக்கம்முதல் இறுதிவரை என்னென்ன உருக்கள் ஆடினாள் எனத் தெளிவாகக் கூறுகிறது. முதலில் அப்பெண் தெய்வ சுருதி பாடினாள். பின்னர் கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் ஆகிய இசைக் கருவிகள் இசைத்தன. பின்னர் அப்பெண்புஷ்பாஞ்சலிசெய்தாள். அதன் பின் பிள்ளையார் கவுத்துவம், சுப்ரமண்யர் கவுத்துவம் ஆடினாள். பின்னர் நந்திகேசுவரரின் அபிநயதர்ப்பணத்தில் கூறியுள்ளபடிஅலாரிப்புசெய்தாள். பின்னர்கைச்சலாம்செய்தாள். இதன்பின்னர் வரிசையாகதருஜதி, கீதம்முதலியன ஆடினாள் என மேலும் தொடர்கிறது.தெய்வசுருதி காணும் இசை, ராகம், கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் கோணாமல் கூடும் சுருதியுடன் கொம்பனையாள் சங்கீதம் பாடும் சுருதி இன்பம் பாலிக்க என அப்பாடல் தொடங்குகிறது. சிலப்பதிகார காலத்திலேயே ஆடல் தொடங்கும் முன் தெய்வப் பாடல் இரண்டு பாடப்பெற்றது எனக் கண்டோம். சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் பிறகு இந்நூலில்தெய்வச்சுருதிபாடப்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நமது மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காப்பாற்றப்படும் மரபுஎன்பு இதிலிருந்து தெளிவாகிறது. கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடுதூதுததொடர்ச்சி விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் நாயக்கர் என்ற படைத்தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார். விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் (1509 - 1564) மதுரை மண்டலத்‌தில் படை மானிய முறையில் 72 பாளையப்பட்டு. கூளப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்ட 72 பாளையங்களில் ஒன்றான நிலக்கோட்டை என்னும் பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர். கூளப்பாநாயக்கருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் இருந்த விபரம் சந்தா சாகிப்பின் வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நிலக்கோட்டை அப்போது (தற்போதைய அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம்) என்பது ஒரு படைநிலையாகவே அமைக்கப்பட்டது. அச்சமயம் கூளப்ப நாயக்கரின் தந்தை சிந்தமநாயக்கர் நிலக்கோட்டை பாளையக்கரராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரையை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர். வடக்கில் திண்டுக்கல்லிருந்து மேற்கே சித்தையன் கோட்டைவரை பரவியிருந்த 108 கிராமங்களை உள்ளடக்கிய நிலக்கோட்டை பாளையத்தை திறம்பட நிர்வாகித்து வந்தார். சிந்தமநாயக்கரின் மகன்தான் கூளப்ப நாயக்கர். நாளடைவில் நாயக்கர் ஆட்சி முடிந்து ஆற்காடு நவப்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது. ஒரு சமயம் கூளப்ப நாயக்கர் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலை சாதிப் பெண்ணைக் கண்டார்; கண்டதும் காதல் பற்றிக்கொண்டது. நாயக்கர் மலை சாதிப் பெண்ணுடன் காதல் முற்றி காமம் ததும்ப வாழ்ந்திருக்கிறார். இதற்கிடையே சிந்தமநாயக்கரிடமிருந்து ஏதோ அவசர செய்தி வரவே கூளப்ப நாயக்கர் நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்பியிருக்கிறார். நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிந்து போனார் நாயக்கர். பிறகு என்ன நடந்தாலும் சரி என்று துணிந்து பண்றிமலைக்குப் போய் நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி அப்பெண்ணை நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டது இக்கதையின் உச்ச கட்டம். நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் தல வரலாறு: .பீஜப்பூர் சுல்தானுக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நடந்த போரில் சுல்தான் தோற்கடிக்கபட்டான்.இந்த போரில்(1509) உதவிய வீரத் தளபதிக்கு(கூளப்ப நாயக்கர் ) தமிழ்நாட்டில் கோட்டை கட்டி ஆள உரிமை வழங்க பட்டது.ஆந்திராவிலிருந்து இவர்கள் கிளம்பும் போது அவர்கள் வழிபட்ட அகோபிலம் என்ற இடத்தில் இருந்த நரசிம்ம பெருமாளையும் பிடி மண் கொண்டு பல பூஜைகள் செய்து நிலக்கோட்டைக்குகொண்டு வந்து ஒரு இடத்தில் வைத்து வழிபட்டனர்.அவ்விடத்தை நோக்கி கோட்டை வாசல் இருக்கும் படி கோட்டை கட்டபட்டது.பின்கோட்டை வாசலின் நேரே பிடி மண் வைத்து வழிபட்ட இடத்தில் அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் சேவப்ப கூளப்ப நாயக்கர் அவர்களால் கட்டபட்டது.ஒரு தெப்பக்குளமும் கூளப்ப நாயக்கர்அவர்களால் வெட்டபட்டு மைய மண்டபமுமம் அமைக்கப்பட்டது.அப்போதுஇருந்த கோபுரம் உயரமானது;அழகானது;கம்பீரம் ஆனது.ஆண்டு தோறும் மிக சிறப்பாக தெப்பத் திருவிழா நடை பெற்று வந்தது.இவ் விழாவை சிறப்பித்து பெருமாளின் அருளை பெற. 108 கிராமத்தில் இருந்து மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவர்.வீரபாண்டி கெள மாரியம்மன் திருவிழாவை விட வெகு சிறப்பாக நடை பெற்று வந்து இருக்கிறது.விழாவின் அனைத்து செலவுகளும் நிலக்கோட்டை முதல் சேர்மனும் நிலக்கோட்டை ஜமீன்தார் காமய கூளப்ப நாயக்கரார் (வடக்கு அரண்மனை) தன் சொந்த செலவில் செய்வார். அவர் மறைவுக்கு பின் அவரதுகுமாரர் சின்ன சாமி கூளப்ப நாயக்கர் பார்த்து வந்தார்.ஜமீனின்நிலை குறையவே அரசாங்கம் கோயிலை எடுத்து கொண்டது.இக் கோவிலின் உள்ளே நாச்சியார் அம்மன்;நவக்கிரககோவில்;சிவ பீட கோவில்;விநாயகர்கோவில்;வைரவர் கோவில்;ஆழ்வார்கள் கோவில்;கருடாழ்வார் கோவில்;திம்ராய பெருமாள்;மல்லீஸ்வரர் கோவில்:ஓபலீஸ்வரர் கோவில் போன்ற உப கோவில்கள் உள்ளன.

நிலக்கோட்டையில் கூளப்ப நாயக்கர் கட்டுவித்த தானியக் களஞ்சியம்

இங்கு நெல் ;கம்பு;சோளம்;கேழ்வரகு ;குதிரைவல்லி;மக்காச்சோளம் போன்ற தானியங்களை கொட்ட தனி தனி அறைகள் இருந்தன;நிலக்கோட்டை அரண்மனை யில் வேலை செய்த மக்களுக்கு கூலியாக பணத்திற்கு பதில் தானியங்கள் கொடுக்கபட்து;

இதைப்போல வத்தலக்குண்டு கிராமத்திற்கு சேவுகம்பட்டி முத்திலாபுரத்திலும்;ஆத்தூர் கிராமத்திலும்;பிள்ளையார் பட்டி ;பித்தைளைபட்டி கிராத்திலும் மொத்தம் ஒன்பது பெரிய தானியக் களஞ்சியங்கள் இருந்திருக்கிறது.

இன்னும் அந்த பழமையான கோட்டைக்கு உள்ளே மன்னர் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.ஜெகதீஷ் குமார கூளப்ப நாயக்கர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை அளித்து வருகிறார்.

சுருக்கம்[தொகு]

வார்ப்புரு:Information==சுருக்கம்== வார்ப்புரு:Information==சுருக்கம்== வார்ப்புரு:Information

சுருக்கம்[தொகு]

வார்ப்புரு:Information


சுருக்கம்[தொகு]

வார்ப்புரு:Information

சுருக்கம்[தொகு]

வார்ப்புரு:Information

சுருக்கம்[தொகு]

வார்ப்புரு:Information

சுருக்கம்[தொகு]

வார்ப்புரு:Information

அனுமதி[தொகு]


இந்த ஆக்கத்தின் காப்புரிமை உடையவராகிய நான், இதன் மூலம் பின்வரும் அனுமதிச் சான்றுகளின் படி இவ்வாவணத்தை வெளியிடுகிறேன்:

அனுமதி[தொகு]


இந்த ஆக்கத்தின் காப்புரிமை உடையவராகிய நான், இதன் மூலம் பின்வரும் அனுமதிச் சான்றுகளின் படி இவ்வாவணத்தை வெளியிடுகிறேன்:

அனுமதி[தொகு]


இந்த ஆக்கத்தின் காப்புரிமை உடையவராகிய நான், இதன் மூலம் பின்வரும் அனுமதிச் சான்றுகளின் படி இவ்வாவணத்தை வெளியிடுகிறேன்:

  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்பெரிய எழுத்துக்கள்பெரிய எழுத்துக்கள்

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.

P

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுப்பு:Public_domain&oldid=1639662" இலிருந்து மீள்விக்கப்பட்டது