பயனர்:ஆ.முனியசாமி/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
                                                         “பூசேரி கிராமம்”
 

எனது பெயர் ஆ.முனியசாமி. எனது ஊர் தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பூசேரி கிராமத்தைச் சேர்ந்தவன். எனது ஊரின் எல்லைகளாக கிழக்கே கடம்போடை என்ற ஊரும் மேற்கே ஆதங்கொத்தங்குடி என்ற ஊரும் தெற்கே மறவாய்க்குடி என்ற ஊரும் வடக்கே வளநாடு என்ற ஊரும் உள்ளன. எங்கள் ஊரில் பல்வேறு சமூக மக்கள் இருந்தாலும் இந்தியாவைப் போன்று வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஊராக உள்ளது. இந்த ஊரில் அரண்மனை உள்ளதால் பழங்காலத்தில் அரசர்கள் வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது. தற்போது இந்த கட்டிடம் ஊரின் ஒரு அடையாளச்சின்னமாக உள்ளது. எங்கள் ஊர் இராமநாதபுரத்திலிருந்து முதுகுளத்தூர் செல்லும் வழியில் தேரிருவேலிக்கு அருகில் இராமநாதபுரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஆண்களும் பெண்களும் சம விகித்தில் உள்ளனர்.