பாலைத் தயிர் ஆக்கும் செயலுக்கு தயிர் தோய்த்தல் என்பர்...நன்றாகக் காய்ச்சியப் பால் சற்று வெதுவெதுப்பாகக் குளிர்ந்ததும், அதில் சிறிது தயிர் ஊற்றி நன்றாகக் கலந்து மூடி ஓர் இரவு முழுவதும் வைத்துவிடுவர்...மறு நாள் காலை பால் கெட்டியான தயிராக ஆகியிருக்கும்...அரை இலிட்டர் பாலுக்கு ஒரு மேசைக்கரண்டி தயிர் என்பது விகிதமாகும்...