trinity
Appearance

ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவியாக உள்ளமை.
திருவிவிலிய ஓவியம். 15ஆம் நூற்றாண்டு.
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]trinity
- (கிறித்தவ வழக்கில்) ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாக உள்ளார் என்னும் மறையுண்மை
- திரித்துவம்
- தூய தமதிரித்துவம்
விளக்கம்
[தொகு]உலகத்தைப் படைத்து, மனிதரைப் பாவத்திலிருந்து மீட்டு, அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் தாம் ஒரே பரம்பொருளாய் இருக்கும் அதே வேளையில் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாய்த் தம்மை வெளிப்படுத்தியுள்ளார் என்று கிறித்தவர் நம்புகின்றனர். இந்த மறையுண்மை திரித்துவம் (மூவொரு கடவுள்) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- இயேசு, "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" என்றார் (மத்தேயு 28:19)திருவிவிலியம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---trinity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு