அகதி என்பது புலம்பெயர்ந்தவர்களை குறிக்கும். அதாவது நாடு விட்டு வேறு நாட்டிற்கு சென்றவர்கள்; ஒரு கிராமத்தில் இருந்து வேறு ஒரு கிராமத்திற்கு அடைக்கலமாக சென்றவர்கள் - இவர்களை அகதிகள் என்று சொல்லுவார்கள்.
இதன் பயன்பாட்டை பார்க்கலாம்:
01. பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கில் அகதிகள் வந்தார்கள்;
02. இலங்கை நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு படகுகளின் மூலம் அகதிகள் வந்தார்கள்.
03. பல வருடங்களுக்கு முன்பாக பர்மா போன்ற நாட்டில் இருந்து அகதிகள் இந்தியாவிற்கு வந்தவண்ணம் இருந்தார்கள்;
04. தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்காக அகதிகள் குடியிருப்புகள் தனியாக உள்ளன.
05. பல நாடுகள் அகதிகளுக்கு தனி குடியிருப்புகள் கட்டிக்கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கை தந்து வருகின்றன.