மனிதர்கள் தங்கள் அக்குள் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். தினமும் குளிக்கும்போது, மறக்காமல் அக்குள் பகுதிகளை சோப்பு முதலியவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் அவசியம். இல்லையென்றால், அசுத்தம் அதிகமாகி புண்கள் வர வாய்ப்பு உண்டு. சில மனிதர்கள் நெருங்கி வரும் போது உடல் நாற்றம் ஏற்படுகிறது என்றால், அவர்கள் தங்களுடைய அக்குள் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் கொள்ளுவதில்லை என்று கண்டு கொள்ளலாம்.