இஃதொரு குற்ற விசாரிப்புக்கான/துப்பறிதற்கான சித்திரவதை...குற்றவாளியென அறியப்பட்ட/தடுத்து வைக்கப்பட்ட ஒருவரின் மூக்கிலும், வாயிலும் தண்ணீரைத் தொடர்ந்துப் பீச்சியடித்து, நீச்சல் தெரியாத ஒருவர் நீரில் மூழ்கி, தன் உயிருக்காகப்படும் துன்பத்தைப்போன்ற உணர்ச்சியையும், அச்சத்தையுமுண்டாக்கி, உண்மையை விசாரித்தறியும் முறை...இது ஓர் அரசின் காவல்/இராணுவத் துறை அல்லது துப்பறியும் துறையால் தொன்றுதொட்டுக் கையாளப்படும் ஒரு முறையாகும்...இந்த வதைக்கு உள்ளாக்கப்படும் மனிதரைப் படுக்கவைக்கப் பயன்படும் மேசை போன்ற அமைப்பை ஆங்கிலத்தில் waterboard---வாட1ர் போ3ர்ட்3 என்பர்...