திருமாலின் தீவிர பக்தனான பிரகலாதனின் தந்தை இரணியகசிபு... பிரகலாதனை திருமாலை மறக்கச்சொல்லி, அவர் கேட்காததால், தன் மகனென்றும் பாராமல், அவரை பலவிதமாகத் துன்புறுத்திக் கொல்ல முயன்ற அசுர குலத்து மன்னன்... திருமாலின் நான்காவது அவதாரமான நரசிம்மரால் வயிறு கிழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவன்...இரணியகசிபு எனும் இந்தப் பெயருக்கு தங்கத்தினாலான இருக்கையையும், ஆடைகளையும் கொண்டவன் என்பதும் ஒரு பொருளாகும்...