முல்லைப்பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முல்லைப்பாட்டு, பெயர்ச்சொல்.
  • இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்பு[தொகு]

This is an old thamizh literary book of sangan age

நூலின் வகை[தொகு]


நூலின் அமைப்பு[தொகு]

  • அகப்பொருள் சார்ந்த இந்நூல் 103 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்றது.
  • பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் முல்லை எனப்படும். இத்தகைய காட்சிகளை விவரிக்கும் நூலாகையால் இதற்கு முல்லைப்பாட்டு எனப் பெயர்.

நூலின் பகுப்பு[தொகு]

  • அரசன் (தலைவன்) அரசியை (தலைவியைப்) பிரிந்து செல்லல், தலைவி ஆற்றாமையால் துயர் கொள்ளல், போர்க்களக் கட்சிகள், பாசறையில் வெற்றி முழக்கம், அரசன் வெற்றியுடன் திரும்பி வருதல் என நூலின் பகுப்பு அமைந்துள்ளது.

நூலை இயற்றியவர்[தொகு]

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்னும் பெரும் புலவர்

நூலின் காலம்[தொகு]

  • கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது இந்நூல் என்பது அறிஞர்கள் கருத்து.

.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/05-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=முல்லைப்பாட்டு&oldid=1929066" இலிருந்து மீள்விக்கப்பட்டது