சிறுபாணாற்றுப்படை
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- சிறுபாணாற்றுப்படை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]நூலின் வகை
[தொகு]- சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒப்பிடுகையில், சிறுபாணாற்றுப் படை, பாடலின் அடியளவில் சிறியது. ஆகவே இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
தொகை நூல்கள்
[தொகு]- சங்க கால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்று சிறுபாணாற்றுப்படையும் பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களுளொன்று
நூலின் அமைப்பு
[தொகு]- நேரிசைஆசிரியப் பாவினால் இயன்ற இந்நூல் 269 அடிகளைக் கொண்டது. ஓய்மான் நாட்டு மன்னன் நல்லியக் கோடனைப் பற்றியது இந்நூல் இப்போதுதிண்டிவனம் மற்றும், அதனைச் சூழ்ந்துள்ள பகுதியும், முற்காலத்தில் ‘ஓய்மானாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது.
நூலின் பகுப்பு
[தொகு]நூலை இயற்றியவர்
[தொகு]- இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் பெரும்புலவர்.
நூலின் காலம்
[தொகு]- கி.பி.2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்நூல் எழுந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/03-ilakkiyam.html
