திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி


திருக்குறள் அகரமுதலி ஓகார வரிசை[தொகு]

[தொகு]

= அசைநிலை=பொருளின்றிச் சீர்நிரப்ப அசையாகி நிற்பது, 31, 99, 211, 318, 819, 987, 990, 1004, 1016, 1029, 1048, 1070, 1081, 1089, 1170, 1171, 1178, 1184, 1195, 1206, 1240, 1241, 1267, 1329;
= எதிர்மறை, 71, 85, 190, 304, 315, 483, 591, 626, 705, 707, 775, 846, 1014, 1149, 1154, 1159, 1245, 1258, 1260;
= கழிவு/ கழிவிரக்கம், 340, 1088, 1252, 1253, 1254;
= தெரிநிலை, 1257;
= இடைவிடாமை, 1204;
= பிரிநிலை: மிகுதியின் வந்த குறிப்பு, 1176, 1247;
= வினா, 968, 1085, 1117, 1143, 1181, 1208, 1222, 1237, 1293, 1318, 1323, 1328.
ஓஒ
= வியப்பின் குறிப்பு, 1088;
= மிகுதிப் பொருளில் குறிப்பு 1176;
= இடைவிடாமை, 1204.
ஓஒதல்
= தவிர்தல்=(தவிர்க), 653.

ஓசை[தொகு]

ஓசை
= ஒலி 27.
ஓச்சி
= செலுத்தி, தொடங்கி 562,
ஓச்சும்
= செலுத்தும், 544, 545.

ஓட[தொகு]

ஓட
= தாட்சண்யப்பட[கண்ணோட] = செலுத்த, 578.
ஓடா
= ஓடமாட்டா, 496.
ஓடாதவர்
= தாட்சண்யப்படாதவர்[கண்ணோடாதவர்], 576.
ஓடாது
= தாட்சண்யப்படாமல்[கண்ணோடாது], 541.
ஓடி
= தாட்சண்யப்பட்டு[கண்ணோடி], 579;
= (மீறிச்)சென்று[மருங்கோடி] = கொடுநெறிக்கண் சென்று, 210.
ஓடு
= உம் 632;
= உடன்(3-ஆம் வே.உருபு, உடனிகழ்ச்சிப் பொருளில்), 37, 338, 410, 413, 426, 482, 499, 516, 576, 636, 698, 702, 704, 890, 983, 1310.
ஓடும்
= ஒடும், 496.
ஓட்டத்து
= தாட்சண்யத்தின்கண்[கண்ணோட்டத்து], 572.
ஓட்டம்
= தாண்சண்யப்படுதல்[கண்ணோட்டம்], 571, 573, 574, 575, 577, 983;
= அதி.58 [கண்ணோட்டம்]
ஓட்டு
= ஓட்டம் = தோல்வி, 775ழ

ஓதி[தொகு]

ஓதி
= கற்று, 834.
ஓத்து
= மறை, 134.

ஓம்பப்படும்[தொகு]

ஓம்பப்படும்
= காப்பாற்றத்தகும், 131.
ஓம்பல்
= வழுவாமற் செய்தல், 43;
= புறந்தருதல் 89;
= பேணல், 390;
= ஓம்புக = ஒழிக, 612;
= காக்க, 642;
= நீக்குக, 820;
= அழுங்குவிப்பாயாக, 1155;
= அதி.9 [விருந்தோம்பல்].
ஓம்பா
= (புறந்தருதலை) இகழுகின்ற, 89;
= ஒழியாமல், 861.
ஓம்பி
= போற்றி, 81;
= மிசைவித்து, 85;
= பேணி, 86, 132, 244, 549;
= காத்து, 88;
= மனத்தை ஒருக்கி, 132.
ஓம்பின்
= காப்பாற்றினால், 1155.
ஓம்பு
= அஞ்சாதே, 1149.
ஓம்புக
= ஒழிக, 506, 861.
ஓம்புதல்
= குறிக்கொண்டு காப்பாற்றுதல், 322;
= இவறுதல் = லோபஞ்செய்தல், 626.
ஓம்பும்
= காக்கும்[ஓம்பும் வாழ்க்கை], 968.
ஓம்புவான்
= காப்பாற்றுபவன், 83, 84.

ஓர்[தொகு]

ஓர்
= ஒரு = ஒன்றாகிய, 429, 465, 588, 645, 704, 796, 848, 902, 932, 1053, 1098, 1153, 1307;
= ஒரு குறிப்பிட்ட[ஓர் ஐந்தும், ஓர் எழுபது],24;
= சற்றேறக் குறைய, 639.
ஓரா
= ஆராய்ந்து, 548.
ஓரார்
= செவிகொடுத்துக் கேளார், 695.
ஓரும்
= அசைநிலை, 40, 366.
ஓர்த்து
= தெளிய ஆராய்ந்து, 357.
ஓர்ந்து
= நாடி, 541.

ஓவா[தொகு]

ஓவா
= நீங்காத, 734;
= ஒழியாமல், 1205.
ஓவாது
= ஒழியாமல் 33;
= இடைவிடாமல், 933.

திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை முற்றும்[தொகு]

பார்க்க:[தொகு]

திருக்குறள் அகரமுதலி-அ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-

க-

ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ. || ஞா. || த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- | நா, நி- | நீ,நு,நூ- | நெ,நே,நொ,நோ.|| ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|